Friday, March 5, 2010

மார்க்ஸ் ”சேடிஸ்ட்”களின் வன்முறை வெறியாட்டம்

ஈழத்திலே சிங்கள் தமிழர்களை கொன்று குவித்தால்...
தமிழன் சிங்களனை திருப்பி தாக்கூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்.

அண்ணன் தம்பிகளின் கண்முன்னே தமிழ்ப்பெண்களை சிங்களன் வன்புணர்ச்சி செய்தால்...
அண்ணன் தம்பிகள் சிங்களனை தடுக்கக்கூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்.

சிங்கள இனவெறி அரசு தமிழனத்தின் மீது கொத்துக்குண்டுகளை வீசி கொண்று குவித்தால்...
தமிழீழ அரசு திருப்பித் தாக்ககூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்புபணியை தமிழக அரசு ஊழியன் செய்யுபோது...
மளையாளிகள் தமிழ்நாடு அரசு ஊழியனை விரட்டி அடித்தாள்...
தமிழ்நாடு அரசு அதை குறைந்த பட்சம் கண்டிக்கக்கூடாது...

மானமுள்ளவர்கள் யாராவது கேரளாவுக்கு செல்லும் பாதைகளை அடையாளத்திற்காக மறித்தால் கூட...

சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது...
சனநாயகவழியில் பேசி தீர்க்க வேண்டும்...

இப்படி எதற்கெடுத்தாலும் சனநாயகப்பாதையிலேயே அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டும் என்று வாய்கிழிய பேசும் இந்திய கம்யூனிஸ் கட்சி (மார்க்கசிஸ்ட்) இன்று மக்கள் தொலைக்காட்சியின் மீது வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. உங்களுடைய சனநாயகப்பாதை என்னவென்று தமிழ்நாட்டு மக்களுக்கு இன்றுதான் புரிந்தது...

சனநாயகம் என்பது ஒருவழிப்பாதையல்ல என்பதையும் மார்க் சிஸ்டுகள் இன்று உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்...

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு தோழர்களே!...

உங்கள் வாதப்படி உ.ர.வரதராசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று வைத்துக்கொண்டாலும், தற்கொலையை தூண்டிவதும் குற்றம் என்று இந்த நாட்டு சட்டம் சொல்லுது, தமிழ்நாடு காவல்துறையிடம் நீங்கள் யாரை சரணடைய வைக்கப்போகிறீர்கள் என்று உங்கள் பொலிட் பீரோ கூட்டி முடிவெடுங்கள்....

Tuesday, December 8, 2009

நடிகை ரம்பாவுக்கு ஓராண்டுக்கு எத்தனை பிறந்தநாள்?


இன்றைய “தினத்தந்தி” நாளேட்டில் நடிகை இரம்பா தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்ற செய்தி வந்துள்ளது. (மகிழ்ச்சி இரம்பா பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்..)

கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்ற செய்தி இந்த ஆண்டு அடிக்கடி “தினத்தந்தி”, “தினகரன்” போன்ற நாளேடுகளில் செய்தி வருகிறது. (முதல்வரை யாராவது சந்திச்சா செய்தி வரத்தான் செய்யும்)


ஆண்டுக்கு ஒருமுறைதான் அனைவருக்கும் பிறந்தநாள் வரும். (இரம்பாவுக்கு மட்டும் ஏம்பா அடிக்கடி பொறந்தநாள் வருதுன்னு யாரும் கேட்கக்கூடாது)


கருணாநிதி ஒரு செய்தியை வெளியிடுகிறார் என்றால் யாருக்கோ ஏதோ ஒரு செய்தியை குறிப்பால் உணர்த்துகிறார் என்று பொருள்... (உங்களுக்கு ஏதாவது செய்தி தெரிந்தால் சொல்லுங்க...)

Thursday, April 2, 2009

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன உணர்வுடன் செயற்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியும்: தமிழருவி மணியன்

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன...' எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நாற்காலி மனிதர்களின் நாடக மேடைதான் தமிழக அரசியல் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.

நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக்கொள்வது?

'வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழை கூடக் களத்தில் நிற்பான். நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான் விரும்புவேன். பல மோசமான வெற்றிகளை விட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது' என்றார் ஜோர்ஜ் எலியட்.

ஆனால், நம் அரசியல் தலைவர்களுக்கு வெற்றிதான் முக்கியம். இங்கே கொள்கைகளை பலியிடுவதுதான் கூட்டணி தர்மம்!

பாவம், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள்... பாசிச வெறி பிடித்த ராஜபக்ச இராணுவத்தால் கரிக்கட்டைகளாய் குவிக்கப்படும் தங்கள் சொந்த உறவுகளின் சோகம் தவிர்க்க உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த 'சொக்கத் தங்கம்' சோனியா காந்தியிடம் கலைஞர் தன் செல்வாக்கைப் பயன்படுத்துவார் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர்.

ஈழத்தமிழரின் பிரச்னை குறித்துப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்று இரவு, பகல் கண்ணுறக்கமின்றிக் கண்ணீர் வடிக்கும் 'தமிழ்க்குடி தாங்கி' மருத்துவர் இராமதாஸ், சிறிலங்கா அரசுக்குத் துணை நிற்கும் இந்திய அரசின் செயலைக் கண்டித்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து மகன் அன்புமணியை விலகச்செய்து, ஈழத் தமிழரின் இன்னலைத் தேர்தல் பிரச்சினையாக்கி மாநிலம் முழுவதும் இனவுணர்வைத் தூண்டுவார் என்று நாளும் நம்பிக்கை வளர்த்தனர். அவர்களுடைய அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின.

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் கொழுந்து விட்டெறிந்த ஈழ ஆதரவு நெருப்பு ஒவ்வொரு தமிழர் நெஞ்சிலும் தகித்தபோது, பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்து அரசியல் பாரம்பரியம் மறு உயிர்ப்பு அடைந்தது. அதனால் உந்தப்பட்டு தீக்குளிக்கும் அப்பாவித் தியாகிகளின் பட்டியல் நீண்டது. கருகிக் கிடந்த சடலம் தேடி ஓங்கிய குரலில் ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஓடியது. எங்கும் உணர்ச்சி வெள்ளம். கலைஞரின் ஆட்சி அதைக் கண்டு அரண்டது.

ஒருபுறம் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை, மறுபுறம் இலங்கைத் தமிழர் நலவுரிமைப் பேரவை என்று வீதி நாடகங்கள் இனவுணர்வு ஒப்பனைகளுடன் அரங்கேறின.

இரண்டு பக்க நாடகங்களிலும் அரிச்சந்திரன்-சந்திரமதி மயான காண்டப் புலம்பல்கள் நெஞ்சைப் பிளந்தன. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈழ நாடகத்தில் இரண்டு பக்கமும் அவசரம் அவசரமாய்த் திரை விழுந்தது.

கூட்டணி முயற்சிகள் தொடங்கின. 'இனமே அழியினும், ஈழமே கருகினும், சோனியா காந்தியின் கருணையில் ஆட்சி நாற்காலியில் அசையாமல் இருப்பதே அடியேன் லட்சியம்' என்று முடிவெடுத்த முதல்வர் கலைஞர், இராமதாசுக்கும் விஜயகாந்த்துக்கும் திருமாவளவனுக்கும் வெவ்வேறு வலைகளை விரித்து வைத்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சக்திமிக்க மாநிலக் கட்சிகளிடம் கையேந்தி நிற்கும் காங்கிரஸ், விஜயகாந்த்தையும் மருத்துவரையும் கட்டியணைத்துக் கூட்டணியமைக்கக் கால்களில் விழுந்து கண்ணீர்விட்டது. பேரம் படியாததால், விஜயகாந்த் லட்சிய வீரரானார். ஆசைப்பட்ட தொகுதிகள் அமையாததால், காங்கிரசை ஈழத் தமிழரின் விரோதியாய் இனம் கண்டுகொண்டார் இராமதாஸ். இதுதான் பின்னணி உண்மை!

கலைஞரின் வலையில் விடுதலைச் சிறுத்தைகள் விரும்பி விழுந்தன. இரண்டு தொகுதிகளுக்காக திருமாவளவனின் புறநானூற்றுப் போர்க்கோலத்தில் புழுதி படிந்தது.

ஈழத்தில் இன்றுவரை இனப்படுகொலை ஓயவில்லை. திசையெங்கும் வாழ்வாதாரங்களை முற்றாக இழந்து உணவின்றி, மருந்தின்றி நம் தொப்புள் கொடி உறவுகள் லட்சக்கணக்கில் சாவுப் பள்ளத்தில் சரிந்து கிடக்கின்றனர்.

ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை. பண்டாரநாயக்க, சேனநாயக்க, சிறிமாவோ, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விட ராஜபக்ச பெரிய இராஜதந்திரி இல்லை. ஆனால், அவர் ஜெயவர்த்தனவை விட மோசமான இன அழிப்பு அரக்கனாக விசுவரூபம் எடுத்ததற்கு இந்திய அரசின் ஆதரவுதான் அடித்தளமானது.

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது.

மன்மோகன் அரசு சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடப்பது நாடறிந்த உண்மை. காங்கிரஸ், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விழாவில் மன்மோகன் சிங் மனம் நெகிழ்ந்து சோனியா காந்தியை 'மத்திய அரசின் காவல் தெய்வம்' என்று வர்ணித்திருக்கிறார்.

அந்தக் காவல் தெய்வம் இன்றுவரை ஈழத்தமிழர் அவலம் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதனால், அவருடைய தலைமையில் இயங்கும் காங்கிரசுக்கு இனவுணர்வுள்ள எந்தத் தமிழரும் வாக்களித்தால் அது தகுமா? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை மாநிலம் முழுவதும் மேடைபோட்டு, 'முதல்வர் கலைஞர் தமிழினத்துக்கு துரோகம் இழைத்து விட்டார்' என்று முழங்கியது.

முத்துக்குமார் தொடங்கிவைத்த தீக்குளியல் தியாகம் வைகோவையும், இராமதாசையும், தா.பாண்டியனையும், திருமாவளவனையும் ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க 'எந்தத் தியாகத்தையும் செய்யும்' சூளுரைக்குத் தூண்டியது. உண்மையில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்திருப்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஆண்டுக்கணக்கில் 'பொடா' சட்டத்தில் வைகோவை சிறையிலடைத்தார் ஜெயலலிதா.

'பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தண்டிக்கவேண்டும்' என்று முதல்வராய் இருந்தபோது சட்டப்பேரவையில் சங்கநாதம் செய்தார். 'நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக அமையட்டும்' என்று இயேசுவின் இரக்கவுணர்வோடு, புத்தரின் பாதையில் ஜெயலலிதாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கி, பகைமையுணர்வைத் தியாகம் செய்து, ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்காக அன்று போயஸ் தோட்டத்தில் அடைக்கலமானார் புரட்சிப்புயல் வைகோ. நாளையே தொகுதி பேரங்கள் படியாமல் போனால், மறுபடியும் அவர் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்வாள் தூக்குவார்!

'ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசு நியமனங்களே கிடையாது. சாலைப் பணியாளர்களை சாவின் விளிம்பில் நிறுத்திய ஜெயலலிதா, ஒரு துளி மையில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய தொழிலாளர் விரோதி' என்று பாட்டாளிகளின் நலனுக்காகப் பாடுபடும் இடதுசாரிகள் கடுமையாக விமர்சித்தனர்.

கிரிமினல் குற்றவாளிகளைப் போல அரசு ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த ஜெயலலிதாவைக் கோட்டையிலிருந்து வெளியேற்ற கலைஞருடன் கைகோத்தனர். இன்றோ, தலா மூன்று தொகுதிகளைக் கேட்டு வரதராஜனும் பாண்டியனும் போயஸ் தோட்டத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து வாதிட்ட காட்சிகளை நாடு பார்க்கிறது. ஆம், தொகுதி ஆசையில் தங்கள் வர்க்கப் போராட்ட உணர்வையே தியாகம் செய்துவிட்டவர்கள் அவர்கள்.

பெரியார், அம்பேத்கர் இருவரின் வாரிசாக வலம்வர விரும்பும் திருமாவளவனிடம் பெரியாரின் நாற்காலிப் பற்றற்ற பண்பும் இல்லை; அம்பேத்கரின் போர்க் குணமும் இல்லை.

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை அவர் கலைஞரிடமும் ஜெயலலிதாவிடமும் அடங்க மறுத்ததும் இல்லை; அத்துமீறியதும் இல்லை. மாறி மாறி சரணடைவார். 'காங்கிரசை அழித்துவிட்டுத்தான் இனி அடுத்த வேலை' என்று அவர் சூளுரைத்த வார்த்தை நெருப்பில் சாம்பல் பூப்பதற்கு முன்பே தன்மானத்தைத் அவர் தாரை வார்த்திருக்க வேண்டாம்.

டெல்லியிலிருந்து பறந்து வந்த காங்கிரசின் குலாம் நபி ஆசாத்துக்குப் பக்கத்தில் போய் நின்று கனிவுப் புன்னகை பூத்திருக்கவும் வேண்டாம். இப்போதும் கெட்டுவிடவில்லை... 'எனக்குக் கலைஞருடன்தான் கூட்டு. காங்கிரஸ்காரர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று திருமா பகிரங்கமாக வாக்குமூலம் வழங்குவாரா?

கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளை இருக்கவிடமாட்டோம் என்று காங்கிரஸ் நண்பர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், கலைஞருக்காக அவர்களை அரவணைக்கத் துடிக்கும் திருமாவளவனின் சுயமரியாதைத் தியாகம் என்னவொரு சிலிர்ப்பைத் தருகிறது... பார்த்தீர்களா தோழர்களே! பொதுவாழ்வில் அடிக்கடி ஏதாவது தியாகம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்தவர் மருத்துவர் இராமதாஸ். சந்தர்ப்பவாத அரசியல் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்ததை, 'இதுதான் சாணக்கிய முத்திரை' என்று கொண்டாட வைத்த பெருமை அய்யாவுக்கே உண்டு.

ஒரே நேரத்தில் கலைஞரோடும் காங்கிரசோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் சாகசக் கலையை அவரன்றி இந்த அரசியலில் வேறு யாரறிவார்? அவருக்குத் தேவை அதிகத் தொகுதிகள். அவருடைய மகனுக்குத் தேவை மாநிலங்களவை உறுப்பினர் பதவி. அடுத்த தேவை, மத்திய அமைச்சர் பதவி. இதில் ஈழமாவது எள்ளுருண்டையாவது! தேர்தலுக்குத் தேர்தல் மருத்துவர் செய்யும் கொள்கைத் தியாகம் பெரிதினும் பெரிதல்லவா!

திரைப்பட நடிகர்களை, தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமரவைத்துப் பார்ப்பதில் காங்கிரசுக்கு அளவற்ற ஆசை. எம்.ஜி.ஆர். இருக்கும்வரை அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்த காங்கிரஸ், அவருடைய மறைவுக்குப் பின் ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்று கவரி வீசியது. இன்று விஜய்காந்த்துக்குப் பட்டுக்கம்பளம் விரித்து, 'கோடி அர்ச்சனை' நடத்தப் பெட்டியைத் திறந்து வைத்தும் பயனற்றுப் போனது. பேரம் படியவில்லை... விஜயகாந்த் கூட்டணி காணா தனிப்பெரும் வீரராகி விட்டார்.

போகட்டும்... காரணம் எதுவாயினும்... விஜயகாந்த்தின் 'மக்கள் கூட்டணி அமைக்கும் மனோதிடம்' ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கு ஏன் வரவில்லை? இலங்கைத்தமிழர் பாதுகாப்புப் பேரவை அமைத்து இனவுணர்வை வெளிப்படுத்திய இந்தக் கட்சிகள் ஏன் தேர்தல் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தொடர்ந்திருக்கக்கூடாது? தங்கள் கொள்கையின் வெற்றி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா..? அல்லது, மக்கள் தங்களை நம்பவில்லை... அதனால் தோற்றுவிடுவோம் என்ற அச்சமா? தேர்தலில் வென்றால், வைகோ பிரதமரா? தா.பாண்டியன் உள்துறை அமைச்சரா? பா.ம.க. தலைமையில் மத்திய அரசா? தன்மானம் துறந்து தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் வென்றால் நிதி மந்திரியா?

எதற்காக இவ்வளவு சகிக்கவொண்ணாத சமரசங்கள்?

ஈழமக்களுக்கான அரசியல் தீர்வை ராஜபக்ச அரசு விரைவில் வழங்கும் என்று கலைஞருக்கு பிரதமர் கடிதம் வரைந்திருக்கிறார். இது தமிழரின் வாக்குகளைப் பெற காங்கிரசும் கலைஞரும் நடத்தும் தேர்தல் திருவிளையாடல். சிங்களர் - தமிழர் சம உரிமையுடன் வாழ வழிவகுக்கும் கூட்டாட்சி முறை, தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து, எல்லா மதங்களையும் பராமரிக்கும் மதச்சார்பற்ற மத்திய அரசு, தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் இணைந்த தமிழ் மாநிலம், இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழருக்கு உரிய இடம் என்ற அரசியல் தீர்வை பௌத்த சிங்களப் பேரினவாத அரசு அங்கீகரிக்க இந்திய அரசு வழிவகுக்குமா? இலங்கை சிங்கள நாடு. ஆட்சிமொழி சிங்களம் மட்டும். அரசு மதம் பௌத்தம். ஆளப் பிறந்தவர் சிங்களர் என்று அடம் பிடித்தால் தமிழீழத்தை அங்கீகரிக்க மத்திய அரசு முன்வருமா?

இரண்டில் ஒன்றையும் செய்யாமல் கடைசித் தமிழனும் செத்து மடிந்து அநாகரிக தர்மபாலன் என்ற சிங்களத் தலைவன் கண்ட கனவின்படி இலங்கை முழுவதும் சிங்களர் நாடாய் மாறுவதற்கு, மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்கிறதா?

இந்தக் கேள்விகளோடு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தால், யாருக்குத்தான் வாக்களிக்க முடியும்? நான் யாருக்கும் வாக்களிப்பதாக இல்லை.

ஈழத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபக்கம்; உறவிழந்தவர் மறுபக்கம்; உறுப்பிழந்தவர் இன்னொரு பக்கம். பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல். கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம். இன்று தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில். மக்கள் நலனில் மருந்துக்கும் நாட்டமில்லாத இவர்கள் அமர்ந்து ஆடும் நாற்காலிகள், சுயநல கீதம் இசைத்தபடி இடையறாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.

'என் நம்பிக்கையின் பாடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. தோல்வியின் பூக்களால் உடைந்த என் இதயத்தில், யாரோ துயருற்ற நண்பன் ஒருவன் அதை வைத்திருக்கிறான்' என்று ஈழத்திலிருந்து ஈனஸ்வரத்தில் வரும் சோக இராகம் இன்று யார் காதிலும் விழவில்லை. நாற்காலி மனிதர்கள் செவிடாகிவிட்டனர்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

Wednesday, April 1, 2009

“உத்தமர் கலைஞர் விருது” எனக்கு கிடைக்கும்!

தமிழ்நாட்டில் கருணாநிதியின் வசவுக்கு ஆளாகாத தலைவர்கள் யாருமே இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவருடைய நச்சுநாக்கின் பேச்சுக்கும், நஞ்சை மையாக ஊற்றி எழுதும் பேனாவுக்கும் இடையே சிக்கி சின்னாபின்னமாவது இந்தத் தமிழினம் தான்.

பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி...

பழ.நெடுமாறன் புலியின் முதுகை குத்தி பணம் பறிக்கும் கழுகு...

இராமதாசு ஒரு போலி...

வைகோ ஒரு சகுனி...

தா. பாண்டியன் ஒரு தற்குறி...

கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் குழப்பவாதிகள்...

இப்படி தமிழினத்திற்காக உண்மையாக போராடும், உழைக்கும், பேசும் தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்துவது இவரின் வாடிக்கை.

கருணாநிதி எது செய்தாலும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டு இருப்பவர்களே தமிழ்நாட்டின் தலைவர்களாக இருக்க தகுதியுடையவர்கள். அது எந்த கழிசடையாக இருந்தாலும் பரவாயில்லை... கருணாநிதியை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதும்...

தாங்க முடியல சாமி...

தமிழர்களுக்காக உழைப்பவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இழித்தும் பழித்தும் பேசும் கருணாநிதி அவர்களுக்கு இந்த கையாலாகாத தமிழனின் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,

தாங்கள் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி...

“கருணாநிதிக்கும் அவருடைய அனைத்து குடும்பத்திற்கும் யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கே பதவியும் பவிசும் வழங்கப்படும்.“

“யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு சிறை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.“

-என்ற சட்டத்தை கருணாநிதியின் நலன் கருதி பேராசிரியர் அவர்கள் முன்மொழிய வேண்டும்.

அந்த சட்டத்திற்கு “உத்தமர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப பாதுகாப்புச் சட்டம்” என்று பெயர் சூட்டவேண்டும்.

தமிழர்களை காங்கிரசுகாரர்களிடம் தவணை முறையில் அடகு வைத்து நீங்கள் காசு பார்ப்பதற்காக உங்கள் வயதிற்கு மீறி நீங்கள் உழைக்க வேண்டியுள்ளது. உங்கள் மாமாக்களுக்கும் மன்னிக்கவும் தம்பிகளுக்கும் வேலை மிச்சம்...

எனது கோரிக்கையை தமிழர்களின் நலன்கருதி தாங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக்காக இந்த ஆண்டிற்கான “உத்தமர் கலைஞர் விருதும்” ரம்பாவும் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்...

இப்படிக்கு,

கையாலாகாதத் தமிழன்

Tuesday, March 24, 2009

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்: அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால், புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள், சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.

இந்திய இராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சி, பூநகரி, வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு இரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள இராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பது, எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள இராணுவம் மீட்டு வைத்திருந்தபோது, பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தாவில் என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து ஆனையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள இராணுவம் அஞ்சுகிறது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் இரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது.

இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.

சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த இராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய இராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதைய போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.

இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.

''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது.

இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய இராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.

இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள இராணுவம்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.

தமிழ் ஆர்வலர்களோ, ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய இராணுவம், இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சதீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப்பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.

ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

- இரா. சரவணன்


அநீதியின் பக்கமிருக்கும் இந்தியா!

புல்மோட்டையிலும், மணலாற்றிலும் இந்திய ,ராணுவத்தினர் நேரடியாக போரில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வல்லரசான இந்தியா ஏற்கனவே 1989 களில் ஒரு சிறிய இயக்கமான விடுதலைப் புலிகளிடம் தோற்று ஓடியது. தன் சுய லாபத்துக்காக ஈழப் பிரச்சினையில் விளையாடிய இந்தியா கையை சுட்டுக் கொண்டது.

இப்போது திரும்பவும் தனது கொலைக்கரங்களை ஈழத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. சீனா பக்கமோ, பாகிஸ்தான் பக்கமோ சென்றால் அவர்கள் தர்ம அடி கொடுப்பார்கள். அதனால்தான் என்னவோ, இளிச்சவாயர்கள் என்று எண்ணி தமிழர்களை சீண்டிக் கொண்டிருக்கிறது.

அதி நவீன ரேடார்கள், ஆயுதந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், செயற்கைக் கோள்கள் மூலம் உளவு சொல்லி இந்தியா நேரடியாக போரில் இறங்கினாலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை. போர் இழுத்துக் கொண்டே செல்கிறது. 70,000 இராணுவத்தினர், கணக்கு வழக்கில்லாமல் எண்ணற்ற ஆயுதங்கள், 7 நாடுகளின் உதவிகள், இத்தனையும் கொண்டு இலங்கை அரசு போரை நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. புலிகளின் சூழ்நிலையில் வேறு எந்த பெரிய இராணுவமாக இருந்தாலும் இந்நேரம் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்.

புலிகளும், தமிழர்களும் ஆக்கிரமிப்பு போரை நடத்தவில்லை. அவர்கள் தங்கள் பூர்வீக பூமியை அடிமைத்தளையில் இருந்து மீட்பதற்காக விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தர்மமும் நீதியும் அவர்களின் பக்கம் உள்ளது. தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம் என்று துரியோதனன் போல் கொக்கரித்த மகிந்தவுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறது.

எவராலும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட பிதாமகன் பீஷ்மர் மகாபாரதப் போரில் தோற்றுப் போனார். அக்கிரமத்திற்கும், அநீதிக்கும் துணை போனதால்தான் அவர் தோற்க நேர்ந்தது.

இந்தியா அல்ல, எந்த வல்லரசு உதவி செய்தாலும் எத்துணை வலிமையாக இருந்தாலும் அநீதியின் பக்கம் இருந்தால் வெற்றி கிட்டாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். எத்தனை அடக்குமுறைகளை ஏவினாலும், கொன்று குவித்தாலும், அக்கிரமம் செய்தாலும் சாம்பலிலிருந்தும் தமிழர்கள் மீண்டெழுவார்கள். விடுதலையை அடையும் வரை இந்த போராட்டத்தை தொடருவார்கள்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மறுபடியும் வெல்லும்'.
தமிழகத்திலிருந்து அதிபதி.

நன்றி தமிழ்வின்.காம்

Monday, March 23, 2009

பகத்சிங் - நினைவுநாள்

வீரவணக்கம்



23.03.1931
தூக்கிலடப்பட்ட நாள்

Friday, March 20, 2009

இரணிலுக்கு பணம் தருகிறது இந்தியா

ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ ''

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வருகின்றது.இதேபோன்று ஜேவிபி கட்சியிலும் முக்கிய தலைவர்களுக்கும் பெருமளவான நிதியினை '' ரோ '' அமைப்பு வழங்கியுள்ளது. அத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலரும் ரோவின் இந்த நடவடிக்கைக்கு சோரம் போயுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு சோரம் போயுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் கரிசனை கொள்ளாது, மக்களுக்கு எதுவித அவலங்களும் ஏற்படவில்லை என நியாயப்படுத்திய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாராளுமன்ற அமர்வுகளின் போது சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிடிக்கு உரையாடுவதாகக் கூறிக்கொண்டு தங்களது ஆழ் மனதில் உள்ள கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.

நன்றி: பதிவு.காம்