Wednesday, April 1, 2009

“உத்தமர் கலைஞர் விருது” எனக்கு கிடைக்கும்!

தமிழ்நாட்டில் கருணாநிதியின் வசவுக்கு ஆளாகாத தலைவர்கள் யாருமே இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவருடைய நச்சுநாக்கின் பேச்சுக்கும், நஞ்சை மையாக ஊற்றி எழுதும் பேனாவுக்கும் இடையே சிக்கி சின்னாபின்னமாவது இந்தத் தமிழினம் தான்.

பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி...

பழ.நெடுமாறன் புலியின் முதுகை குத்தி பணம் பறிக்கும் கழுகு...

இராமதாசு ஒரு போலி...

வைகோ ஒரு சகுனி...

தா. பாண்டியன் ஒரு தற்குறி...

கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் குழப்பவாதிகள்...

இப்படி தமிழினத்திற்காக உண்மையாக போராடும், உழைக்கும், பேசும் தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்துவது இவரின் வாடிக்கை.

கருணாநிதி எது செய்தாலும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டு இருப்பவர்களே தமிழ்நாட்டின் தலைவர்களாக இருக்க தகுதியுடையவர்கள். அது எந்த கழிசடையாக இருந்தாலும் பரவாயில்லை... கருணாநிதியை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதும்...

தாங்க முடியல சாமி...

தமிழர்களுக்காக உழைப்பவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இழித்தும் பழித்தும் பேசும் கருணாநிதி அவர்களுக்கு இந்த கையாலாகாத தமிழனின் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,

தாங்கள் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி...

“கருணாநிதிக்கும் அவருடைய அனைத்து குடும்பத்திற்கும் யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கே பதவியும் பவிசும் வழங்கப்படும்.“

“யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு சிறை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.“

-என்ற சட்டத்தை கருணாநிதியின் நலன் கருதி பேராசிரியர் அவர்கள் முன்மொழிய வேண்டும்.

அந்த சட்டத்திற்கு “உத்தமர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப பாதுகாப்புச் சட்டம்” என்று பெயர் சூட்டவேண்டும்.

தமிழர்களை காங்கிரசுகாரர்களிடம் தவணை முறையில் அடகு வைத்து நீங்கள் காசு பார்ப்பதற்காக உங்கள் வயதிற்கு மீறி நீங்கள் உழைக்க வேண்டியுள்ளது. உங்கள் மாமாக்களுக்கும் மன்னிக்கவும் தம்பிகளுக்கும் வேலை மிச்சம்...

எனது கோரிக்கையை தமிழர்களின் நலன்கருதி தாங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக்காக இந்த ஆண்டிற்கான “உத்தமர் கலைஞர் விருதும்” ரம்பாவும் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்...

இப்படிக்கு,

கையாலாகாதத் தமிழன்

0 comments: