Sunday, January 18, 2009

தமிழகத்தின் எழுச்சியால் “பம்முகிறார்” பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைத் தீவில் உள்ள சிங்கள இனவெறி அரசுகள் அனைத்தும் அந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களை பூண்டோடு அழித்தொழித்துவிட்டு அத்தீவை சிங்களர்களின் தீவாக மாற்றும் நடவடிக்கையை காலங்காலமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தன் இனத்திற்காக தமிழர்களை அழித்தொழிக்கும் பணியை சிங்கள இனத்தின் தற்போதையத் தலைவன் இராசபக்சே தன் பரிவாரங்களுடன் தீவிரமாக செய்து வருகிறான்.

இராசபக்சே செய்துவரும் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கு இந்தியாவில் வாழும் தமிழினப் பகைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்திய அரசின் பெயரால் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது ஊரரிந்த இரகசியம்...

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வலியுருத்தி வருகின்றனர்.


ஆனால் தமிழர்களின் குரலை செவி மடுக்காமலும், கோரிக்கைகளையும் வேண்டுகோளையும் குப்பைக்கூடையில் வீசியும் இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசின் தமிழின விரோத போக்கிற்கு எதிராக தமிழகம் தற்போது புதிய பாய்ச்சலோடு வெகுண்டெழுந்துள்ளது. இந்திய அரசுக்கு எதிராகவும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. இதைக்கண்டு காங்கிரஸ்காரர்கள் தற்போது அச்சமடைய தொடங்கியுள்ளார்கள் என்பது அவர்களின் பேச்சின் மூலம் தெரியவருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஏ.கே.அந்தோணி அவரது சொந்த மாநிலமான கேரளாவில் சுற்றுப்பயணம் செய்தபோது வருகிறார். அப்போது ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

"சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. இலங்கையில் சில மனிதநேய பணிகளில் மட்டுமே இந்தியா ஈடுபட்டு வருகின்றது. ஒரு உறுதியான அரசியல் தீர்வு மூலமாகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண முடியும்'' என்று பம்முகிறார்...


சிங்கள இராணுவத்திற்கு ரேடார்கள் வழங்குவதும், வங்கக்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் போர்க்கப்பலை நிறுத்தி வைப்பதும், அப்பாவித் தமிழர்களை நாள்தோறும் கொன்றழிக்கும் சரத் பொன்சேகாவை பாராட்டுவதும், ஆயுதங்கள் வாங்க நிதியுதவி செய்வதும், சீருடை அணியாத தொழிற்நுட்ப வல்லுனர்களையும் போர் விமான பைலட்டுகளையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பது மனித நேயப் பணிகளாம்...

தமிழினத்தின் எதிரிகளே!


தமிழின எதிரிகளும் துரோகிகளும் ஒன்று சேர்ந்து குட்டக்குட்ட தமிழன் குணிந்து கொண்டே இருப்பன் என்று மட்டும் கனவு காணாதீர்கள்... நீங்கள் ஒரு இனமாக தோன்றுவதற்கு முன்னரே தன்னுடைய வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய இனம் தமிழினம்.


நிகழ்காலத்திலும் தமிழனத்தின் எதிரிகள் யார் என்றும் தமிழனின் இலக்கு எதுவென்றும் “எங்கள் கிழவன்” எங்களுக்கு பாடம் நடத்திவிட்டு சென்றுள்ளான்.

1 comments:

Anonymous said...

மூல காரணமான சோனியா அம்மையாரின் பழி வாங்கும் எண்ணத்தை ஒழிக்க ஒரே வழி
மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தையும் மூட வைக்க வேண்டும்.