Thursday, February 12, 2009

உலக நாடுகளே! நாங்களும் மனிதர்கள்தான்!

உலக நாடுகளே!
நாங்களும் மனிதர்கள்தான்,
உங்களைப்போன்று...

நாங்கள் முற்றிலுமாக
அழிந்து போக நீங்கள்
விரும்புகிறீர்களா?

உங்கள் விருப்பம் அதுவாக இருக்காது
என நாங்கள் நம்புகிறோம்...
ஆம். நிச்சயமாக நம்புகிறோம்...

எங்களுக்காக
நீங்கள் செய்ய வேண்டியது
இதுதான்...,

எங்களையும் மனிதர்களாக
ஏற்றுக்கொள்ளுங்கள்...

நாங்கள் நிம்மதியாக வாழ
நாங்கள் கட்டமைத்த
தமிழீழ அரசை ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழீழத்தின் மீது
சிங்கள இனவெறி அரசு நடத்தும்
ஆக்கிரமிப்பு போரை உடனே தடுத்து நிறுத்துங்கள்...

தமிழீழத்தை
விடுதலை பெற்ற சுதந்திர
நாடாக ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான
தடையை நீக்குங்கள்...

தமிழின அழிப்புப் போரை
தொடர்ந்து நடத்தும்
சிங்கள இனவெறி அரசை
தடுத்து நிறுத்துங்கள்...

தமிழின அழிப்புப் போருக்கு
துணைநிற்கும் இந்திய அரசை
கண்டியுங்கள்...

இப்புவியில்
சுதந்திர காற்றை சுவாசிக்க
எங்களையும் அனுமதியுங்கள்...

0 comments: