Tuesday, February 3, 2009

தமிழீழ விடுதலை-ஆதரவு போராட்டத்தை இழிவுபடுத்த தி.மு.க. தயாராகிவிட்டது!

இலங்கைத் தீவில் தமிழர்களே மண்ணின் மைந்தர்கள். அந்தத் தீவில் கால்வைத்த நாள் முதல் இன்றுவரை வந்தேறி இனமான சிங்கள இனவெறி அரசுகள் அனைத்தும் தமிழனத்தை பூண்டோடு அழித்தொழிக்கும் பணியை செய்து வருகிறது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் தமிழகத் தமிழர்கள் அவர்களை பாதுகாத்து எதிரிகளை விரட்டியடிக்க துணைநின்றுள்ளனர். இந்நிகழ்வும் வரலாற்று காலந்தொட்டு இன்றுவரை நடந்துவருகிறது.

வரலாற்று காலந்துதொட்டு இன்றுவரை தமிழர்களுக்குள் பகையை தூண்டிவிட்டு, அவர்களுக்குள் சண்டையிட்டு, போரிட்டு தமிழன் குருதி வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கைப் பார்த்து, கைகொட்டி சிரித்து, தமிழனின் குருதியை குடிக்கும் குள்ளநரிக் கூட்டங்களுக்கும், தமிழினத் துரோகிகளுக்கும் தமிழின வரலாற்றில் பஞ்சமில்லை...

...

இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மிகப்பெரிய அவலமாக தமிழீழ மண் சிவந்துகொண்டிருக்கிறது. தமிழினம் கொத்துக் கொத்தாக பூவோடும் பிஞ்சோடும் சிங்கள இனவெறி அரசால் கொன்று அழிக்கப்படுகிறது.

சிங்கள அரசின் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்துநிறுத்தக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது. அது கடந்த ஆறு மாதமாக தீவிர போராட்டமாக மாறி இன்று வீரமரணம் வரை சென்று கொண்டிருக்கிறது.

தமிழீழ ஆதரவு போராட்டம் இந்த அளவிற்கு தீவிரமடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? யார்? என்பது தமிழனுக்குப் பிறந்த ஒவ்வொருவனுக்கும், தமிழின உணர்வாளனுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.

...

இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து முடிவெடுக்க தமிழ் நாட்டை ஆளும் கட்சியான தி.மு.க. இன்று செயற்குழுவை கூட்டி தமிழினத்தின் விடியலுக்காக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

தி.மு.க.-வின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவரான முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்னையானாலும், தமிழ் தொடர்பான எந்த பிரச்னையானாலும் அதற்கு குரல் கொடுத்து போராட திமுக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அப்படிப்பட்ட திமுக, இன்று ஒரு முக்கியமான காலக் கட்டத்தில் உள்ளது.

இப்போது தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக சில புதிய குரல்கள் ஒலிக்கிறது.

தமிழர் விடுதலை இயக்கங்கள் ஒரே இயக்கமாக விளங்கவில்லை.
அவர்களிடம் ஒற்றுமை இல்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.

இந்த கொடுமைகளை எல்லாம் மறந்து தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்கிறோம்.

திமுக இதையே வலியுறுத்தி வருகிறது.

நாங்கள் குரல் கொடுப்பது இலங்கை தமிழர்களுக்காக மட்டுமே.

தமிழகத்தில் உள்ள தலைவர்கள் காப்பாற்றுவார்கள் என்று இலங்கை தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள். எனவே நாமும் ஆயுதம், ராணுவம், போர் என்பதை ஆதரிக்காமல் தமிழர்களின் சக்தி ஜனநாயகம் மூலம் கூட்டப்பட வேண்டும் என்று இங்கு தீர்மானம் கொண்டு வரவுள்ளோம்.

தமிழ்நாட்டில் சிலர் திடீரென இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் என்று பாவனை காட்டுகிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் 'எல்லாம் முதல்வர் தான் சொல்ல வேண்டும்' என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறார்.

ஈழம் பற்றி பேச, வெளி நாட்டு தமிழர்கள் பற்றி பேச, திராவிட இயக்கங்கள் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது.

தமிழர்களுக்காக போராடுவது போல சிலர் நாடகம் ஆடுகிறார்கள்.

ஆட்சியை விட்டு வெளியே போகிறோம் என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது.

இவ்வாண்டுக்குள் திமுக முடிந்து, எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார்.

இலங்கை பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது.

நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள்.

திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மேலும்,

இலங்கை பிரச்னைக்காக பட்டி தொட்டியெங்கும் கூட்டம், பேரணி, மாநாடு நடத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளது.

...

தி.மு.க. பட்டி தொட்டியெங்கும் நடத்தப் போகும் பேரணி, கூட்டம், மாநாடு போன்றவை எதை நொக்கி இருக்க வேண்டும். எப்படி பேசவேண்டும் என்று மு.கருணாநிதி தனது உரையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்...

தி.மு.க.-வின் மேடைகளில் தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெறும் தமிழீழ ஆதரவு போரட்டமும் கொச்சைப்படுத்தப்படும். அப்போரட்டத்தில் ஈடுபடுபவர்களும், அதன் தலைவர்களும் கொச்சைப்படுத்தப்படுவார்கள்...

மொத்தத்தில் தமிழீழ விடுதலை-ஆதரவு போராட்டத்தை இழிவுபடுத்த தி.மு.க. தயாராகிவிட்டது!

...

தமிழர்களே!
நாம் என்ன செய்யப் போகிறோம்???????????????????????

2 comments:

said...

கருணாநிதி என்ற நபர் ஒரு தேர்ந்த பாப்பான் என்பது இதன் மூலம் அறியலாம்.

said...

//தமிழர் விடுதலை இயக்கங்கள் ஒரே இயக்கமாக விளங்கவில்லை.
அவர்களிடம் ஒற்றுமை இல்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.//
சநநாயகக் கட்சிகளும் அப்படித்தானே ஐயா. நீங்கள் மோதிக்கொள்லவில்லையா? அதை விடுங்கள்.
இப்பொழுதுள்ள நிலையைப் பற்றிக் கதைக்காமல் என்ன பேசுகிறிர்கள் ஐயா.