Friday, August 29, 2008

போவாய்... போவாய்... நீ நாசமாய் போவாய்...

எழுத்தையும் பேச்சையும்
மூலதனமாக்கி...
செய்யக்கூடாத அத்தனை
இழிவுகளையும் செய்து

மிஞ்சியவர்களின் காலில் விழுந்து...
கெஞ்சியவர்களை காலால் மிதித்து...

கட்டிய மனைவி முதல்
பெற்ற பிள்ளை வரை
யாருக்குமே நம்பகமாக இல்லாமல்
தான்... தான்... தான்...
தான்தான்
என்று மட்டுமே வாழ்ந்து...

வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம்
தமிழினத்தை
அடகுவைத்து
வஞ்சித்து
காட்டிக்கொடுத்து

பிரித்தாளும்
சூட்சி செய்து
ஆட்சி அதிகார போதையில்
மிதந்து
தள்ளாடி
தட்டித் தடுமாறும் நிலையிலும்...

எந்தத் துறையிலும்
எந்த நிலையிலும்
எப்போதும்
தமிழனின் ஆளுமையை
விரும்பாத
சகிக்காதா
ஏற்றுக்கொள்ளாத
தமிழினத் துரோகியே...

தமிழினத்திற்காக
உண்மையாக உழைக்கும்
நெடுமாறன் ஐயாவை
இழிவுபடுத்தும் இழிமகனே...

போவாய்...
போவாய்...
நீ நாசமாய் போவாய்...

தமிழ்மகன்

1 comments:

said...

தமிழின விடுதலைக்காக உயிரையும் மதியாமல் அயராது பாடாற்றிவரும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களை இழுவுபடுத்திய அந்த இழிமகன் யார்? தமிழகத் தமிழர்கள் இந்த இழிமகனைச் சும்மா விடக்கூடாது.

கடல்கடந்து வாழும் மலேசியத் தமிழர்களும் ஐயா நெடுமாறன் மீது ஆழ்ந்த மதிப்பும் பற்றும் வைத்துள்ளோம். அவருடைய சீரிய தமிழ் விடுதலைப் பணிகளை நன்கு அறிந்துள்ளோம். அவருடைய அரிய பணிகளுக்கு துணைநிற்கும் தமிழர் பார்வை வலைப்பதிவை வெகுவாகப் பாராட்டுகிறேன்.