Saturday, August 2, 2008

இரஜினி கர்நாடகத்தில் இருந்து பிழைக்க வந்தவர், அவருக்குப் பிழைப்புதான் முக்கியம் - விஜய டி.இராஜேந்தர்

அன்று தமிழர்களுக்கு மத்தியிலே தன்னை ஹீரோவாக காட்டிக் கொள்ள நினைத்தார். இன்றைக்குக் கன்னட அமைப்புகளுக்குப் பயந்து கொண்டு வருத்தம் தெரிவிப்பதாகப் பேசி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் ஜீரோவாக.

இவர் பேசிய பேச்சால்தான் கர்நாடகத்திலே படத்தைத் திரையிட பிரச்னை என்றால் அந்த ஏரியாவின் விலை என்னவோ அந்த நஷ்டத்தை ஈடாகத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டு தமிழ்த் திரைப்பட உலகின் மூலம் போராட வேண்டியதுதானே?

மாறாக, இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் கர்நாடகத்தில் இருந்து பிழைக்க வந்தவர். அவருக்குப் பிழைப்புதான் முக்கியம்.

நன்றி: தினமணி

1 comments:

said...

அவர் பிழைக்கட்டும் , தமிழன் மானத்தை அடமானம் வைக்காமல் இருந்தால் சரி.