Tuesday, June 17, 2008

மாநாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து மனசுல ஏதோ ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யுது...

கருப்பன்: வணக்கம் அண்ணே. நல்லா இருக்கீங்களா?

சிவப்பன்: வணக்கம் தோழர், நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க... என்ன உங்களை ஒரு வாரமா பார்க்க முடியல?

கருப்பன்: நம்ம கட்சி மகளிர் அணியோட முதல் மாநில மாநாடு நடந்தது இல்லையா? அதான்... மாநாட்டு வேலை, அதோட 14, 15 இரண்டு நாளும் கடலூரு மாநாட்டுப் போனேன்...

சிவப்பன்: அப்படியா தோழர், ஆதான் பார்க்க முடியல... மாநாடு எல்லாம் சிறப்பா முடிந்ததா? மாநாடு எழுச்சியா இருந்ததா?

கருப்பன்: மாநாடு சிறப்பாதான் நடந்தது... நம்ம தளபதி இல்லாததுதான் குறை.

சிவப்பன்: தளபதிக்கு உண்மையாகவே உடம்பு சரியில்லையா? இல்ல வேற எதாவது காரணமா?

கருப்பன்: அதான் ஒன்னும் புரியல... தலைவரும் அதபத்தி எதுவும் பேசல... ஆனா மாநாட்டுக்குப் போய் வந்ததிலிருந்து மனசுல ஏதோ ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யுது...

சிவப்பன்: என்ன தோழர் நீங்களே இப்படி செல்லிட்டிங்க...

கருப்பன்: உண்மையான கட்சிக்காரனுக்கு, உயிர கொடுத்து கட்சிக்காக உழைச்சவங்களுக்கு எந்த கட்சியிலும் மரியாத இல்ல அண்ணே... கோயில் சுத்தற மாதிரி தலைமையை சுத்திவரவங்க... காசு பணம் உள்ளவங்க... சொந்த, பந்தம்... சேத்துக்கினவங்க... வச்சிக்கினவங்க... அவங்களுக்கு பொறந்தவங்க... இப்படிப்பட்டவங்களுக்குத்தான் பேரு..., புகழ், மரியாதை, பதவி எல்லாம்...

சிவப்பன்: என்னப்பா திடீர்னு இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசற... உனக்கு மனசு சரியில்லன்னு நினைக்கிறேன்... நாம வழியில நின்னு இதப்பத்தி பேச வேணாம்... உங்க கட்சிக்காரங்க யாராவது கேட்டுட்ட போராங்க... இதப்பத்தி நாம அப்புறம் பேசலாம்...

கருப்பன்: நிங்க சொல்றதும் சரிதாண்ணே... இதப்பத்தி நாம அப்புறம் பேசுவோம்...

சிவப்பன்: சரி தோழர்... வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா? உங்க மகள் பன்னிரெண்டாவது தேர்ச்சி அடைஞ்சிதே... மேற்கொண்டு என்ன படிக்க வைக்கப்போற... அந்த வேலைய முதல்ல பாரு... நாம அப்புறமா பேசுவோம்...

0 comments: