Wednesday, June 25, 2008

அடுக்குமொழிப் பேச்சால் வழங்கப்படுவதல்ல நீதி... - காட்டுமோட்டான்

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200-வது ஆண்டு விழா நேற்று காலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கரிகாற்சோழன் அரங்கில் நடந்தது இவ்விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் பேசும் போது...


“நீதிக்கு புறம்பாக நாங்கள் நடைபோட மாட்டோம்। நீதிக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதற்கு ஆறுதல் கூறுகின்ற வகையில் நீதியை காப்பாற்றுகின்ற வகையில், நீதியைப் பாதுகாக்கின்ற வகையில் நீதிபதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு எப்படி நாங்கள் துணையிருக்க வேண்டுமோ அப்படி துணையிருப்போம் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.”


இச்செய்தியை படித்த என்னைப்போன்ற காட்டுமோட்டான்கள் பூரித்துப்போனார்கள்... நீதியை காப்பாற்ற கருணாநிதி தயாராகிவிட்டார்! என்று...


கருணாநிதி அவர்கள் காப்பாற்றிய நீதியை பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது... பாமரர்களுக்கு, படித்தவர்களுக்கு, சாமானியனுக்கு, ஏழைக்கு, பாழைக்கு, விவசாயிகளுக்கு, திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நீங்கள் இதுவரை வழங்கிய நீதி ஒருபக்கம் இருக்கட்டும்...


உங்கள் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புக்கள் எத்தனையோ பேர் நீங்கள் முதல்வராக இருந்தபோது இருக்கின்றபோது நீதி கிடைக்காமல் தத்தளித்திருக்கிறார்கள்... அவர்களுக்காக நீங்கள் இதுவரை செய்தது என்ன...

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரிலிருந்து தொடங்கி தி.மு.க.-வின் வளச்சிக்காக பாடுபட்ட த.கிருட்டிணன் வரை இவர்களுடன் மதுரையில் உயிரோடு எரிக்கப்பட்ட தினகரன் ஊழியர்களுக்காக தாங்கள் வழங்கிய நீதி என்ன?

நீதிக்கு காயம் ஏற்பட்டாலே பொருத்துக்கொள்ள மாட்டீர்களே!
அதை குத்தி கிழித்தெரிந்து சின்னாபின்னமாக்கியவர்களை நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள்...

அடுக்குமொழிப் பேச்சால் வழங்கப்படுவதல்ல நீதி...

காட்டுமோட்டான்

0 comments: