Monday, June 30, 2008

இரசாயண உரங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கவேண்டும்-வேளாண் அறிஞர் நம்மாழ்வார்

இரசாயண உரங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடைவிதிக்கவேண்டும்.

முதற்காரணம், இதற்காக பல நூறு கோடிகளை மானியமாக நடுவண் அரசு வீணாய் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

இரசாயண உரத்தினால் மண் நச்சுத்தன்மை அடைகிறது. இதன் மூலம் விளைபொருளும் நச்சுத்தன்மையடைந்து நமது உடல் நலத்தையும் பாதிப்படைய வைக்கிறது.

ஆடுமாடுகளை வளர்த்து வந்தாலே அவற்றின் கழிவுகளே சிறந்த இயற்கை உரமாக நமக்குக் கிடைக்கும். ஆனால் இப்படிப்பட்ட மாடுகளை அடிமாடாக அனுப்பிவிடுகிறார்கள். எனவே மாவட்ட எல்லைகளைத்தாண்டி மாடுகளைக் கொண்டுபோகக்கூடாது என அரசு ஒரு சட்டத்தைப் போடவேண்டும். இதனால் இயற்கை உரத்தையும் தரமான ஆரோக்கியமான விளைபொருட்களையும் நாமே உற்பத்தி செய்துகொள்ளலாம்.

நன்றி: நக்கீரன்

0 comments: