Monday, June 30, 2008

விவசாயத்தில் ஊதாரித்தனம் நிறைய இருக்கிறது-வேளாண் அறிஞர் நம்மாழ்வார்

விவசாயத்தில் ஊதாரித்தனம் நிறைய இருக்கிறது. அதாவது நாற்றை நடும்போது ஐந்தாறு நாற்றாக சேர்த்து சேற்றில் நட்டு வருவது நமது நடைமுறையாக இருக்கிறது.

இதை மாற்றி ஒற்றை ஒற்றை நாற்றாக நடவேண்டும். இதனால் ஏக்கருக்கு 30 கிலோ விதை செலவாவதற்கு பதில் வெறும் 2 கிலோ மட்டுமே செலவாகும். இந்த முறையால் விளைச்சலும் இருமடங்கு ஆகும்.

இதேபோல் நீர் வரத்து குறைவான இடங்களில் நெல்லுக்குப் பதில் தானியப் பயிர்களைப் போட்டு நிறைய இலாபம் பார்க்கலாம்.

நம் தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகம். இதற்கு கேழ்வரகுதான் சரியான மருந்துணவு இதை வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

அதற்குப் பதில் இங்கேயே அதைப் பயிரிட்டு ஊராட்சிகள் அளவில் குடோன்களை வைத்து சேமித்து விற்கலாம். இந்த மாற்றங்களையெல்லாம் நாம் உடனடியாக செய்யவில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தை நாம் விரைவிலேயே சந்திக்க வேண்டிவரும் இது வீண் பயமுறுத்தல் இல்லை...

நன்றி: நக்கீரன்

0 comments: