Tuesday, June 24, 2008

"அழகாக ஏய்க்கத் தெரிந்தவனே, அருமையான பிரதிநிதி'' -கவியரசு கண்ணதாசன்


புனிதமான பிரதிநிதிகள் என்ற தத்துவம்,
சாகசம் நிறைந்த பிரதிநிதிகள் கைக்குப் போயிற்று.

"அழகாக ஏய்க்கத் தெரிந்தவனே, அருமையான பிரதிநிதி''
என்று ஒரு பகுதி ஆயிற்று.

ஜனங்கள் தம் நாயகர்களைத் தேர்ந்தெடுப்பதில்
வழி தவறத் தொடங்கினார்கள்.

நாணயம் ஊமையாகிக் கிடந்தது.

ஏய்ப்பவர்களின் வாய், ஏழெட்டு மொழி பேசிற்று.
மொழி இனிமை, முழு நியாயத்தையும் சாப்பிடத் தொடங்கிற்று.

தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றதாக நம்பிக்கொண்டு, அவர்கள் ஆயுள் தண்டனைக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டார்கள்.

ஒரே ஒரு அயோக்கியனைச் சுமந்து கொண்டிருந்த மக்கள்,
ஒரு கூட்டமான அயோக்கியர்களைச் சுமக்கத் தலைப்பட்டனர்.

....கண்ணதாசன்

0 comments: