Monday, February 9, 2009

தமிழீழ விடுதலை - ஆதரவு போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைமையிடம் திட்டம் தயார்!

இலங்கைத் தீவில் உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிங்கள இனவெறி அரசு தமிழின அழிப்பு போரை கடந்த 60 ஆண்டுகளாக நடத்திவருகிறது என்பதும்,

இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் தமிழர்கள் அனைவரும், தங்களின் எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாக உயிர்வாழ தமிழர்களுக்காக “தமிழீழம்” என்ற தனி நாடு அமைய போராடி வருகிறார்கள் என்பதும்,

இலங்கைத் தீவில் தமிழீழ தனிநாடு வேண்டி அரை நூற்றாண்டாக சனநாயக முறையிலான போராட்டங்கள் நடந்தது என்பதும், அத்தகையப் போராட்டங்களுக்கு சிங்கள இனவெறி அரசுகள் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமே பதில் சொன்னது என்பதும்,

சிங்களர்களுக்கு தெரிந்த வழியிலேயே தமிழ் இளைஞர்கள் போராளிக்குழுக்களாக மாறி அவர்களுக்கு பதில் சொன்னதும்,

போராளிக்குழுக்கள் அனைத்தும் இன்று ஒற்றைத் தலைமையில் ஓரணியில் திரண்டு சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக தங்கள் விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பதும்,

சிங்களர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்று ஈழத் தமிழர்களால் கட்டமைக்கப்பட்ட “தமிழீழ அரசின்” ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட “தமிழீழ நாட்டின்” மீது சிங்கள இனவெறி அரசு தற்போது ஆக்கிரமிப்புப் போரை நடத்தி வருகிறது என்பதும்,

...

“தனக்கு அருகில் மொழியாலும், அறிவாலும், வீரத்தாலும், மரபாலும் சிறந்து விளங்கும் “தமிழினம்” தனக்காக சுயாட்சி கொண்ட ஒரு ஆட்சிப்பரப்பை அடைந்து விடக்கூடாது“ என்று இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதும்,

தன்னலம் கருதாது, சுயசிந்தனையுடைய, மனிதநேயம் உள்ள, இனமானம் கொண்ட “மானிடன்“ ஒவ்வொருவனும் அறிந்த உண்மையாகும்.

...


இந்த உண்மை அனைத்தையும் மறைத்துவிட்டு,

“தன் நலனே தமிழினத்தின் நலனாகவும், தனது துன்பமே தமிழினத்தின் துன்பமாகவும், தன் குடும்ப சிக்கலே தமிழினத்தின் சிக்கலாகவும், தன் குடும்பத்தின் மகிழ்ச்சியே தமிழினத்தின் மகிழ்ச்சியாகவும் ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் தமிழர்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும்“ என்று தனது ஊடக பலத்தின் மூலம் தி.மு.க. தலைமை பரப்புரை செய்து செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தன்னெழுச்சியாக கொழுந்து விட்டு எரியும் தமிழின உணர்வை தி.மு.க. தலைமையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “தமிழினத் தலைவர்” என்ற பட்டம் தன்னிடமிருந்து பறிபோய்விடுமோ என்ற அச்சம் தி.மு.க. தலைமைக்கு வந்துவிட்டதே இதற்குக்காரணம்.

இதற்காக மருத்துவமனையில் “ரூம்போட்டு” சிந்தித்தது தி.மு.க. தலைமை. திட்டம் தயார்!

...

திட்டம் – 1: அடக்குமுறை சட்டங்களுக்கு அஞ்சாமல் உண்மையாக தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக செயல்படும் தலைவர்களையும், இயக்கங்களையும், தமிழின உணர்வாளர்களையும் ஓர் அணியாக திரளச் செய்வது,

அந்த அணியைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தன்னால் உருவாக்கப்பட்ட அணியின் மூலம் தொடர்ந்து இழிவுபடுத்துவது,

அவர்களுக்குள் முரண்பாடுகளை செயற்கையாக உருவாக்கி அதை ஊதி பெரிதாக்கி அவர்களுக்குள் பிளவை உண்டாக்குவது,

தேர்தலுக்குள் அந்த இயக்கத்தை நீர்த்துப்போகச் செய்வது,


திட்டம் – 2: தமிழகத் தமிழர்களின் எழுச்சியை இரண்டாவது முறையாக தனதாக்கிக் கொள்வது,

அதற்காக பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மனித சங்கிலிகள் தொலைக்காட்சிகள் நடத்துவது, அந்த நிகழ்வுகளில் உண்மையான தமிழின உணர்வாளர்களை இழிவுபடுத்துவது,

எதிர்வரும் தேர்தலில் வாக்குகளைச் சேகரிக்க தமிழீழ சிக்கலை பயன்படுத்திக்கொள்வது,


திட்டம் – 3: இந்திய பேரரசின் உதவியோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைக்காக களத்தில் போராடும் போராளிகளையும் அழிப்பது,

போராளிகளை அழித்து விட்டு இந்தியாவில் உள்ள தலைவர்களைப் போல் சொகுசு வாழ்க்கையில் நன்கு பழக்கப்பட்ட தலைவர்களை தமிழீழ மக்களின் தலைவர்களாக அடையாளம் காட்டுவது, அந்தத் தலைவர்கள் தி.மு.க. தலைமையை தொடர்ந்து புகழ்ந்து கொண்டிருக்க அவர்களை சென்னையில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து “ஏற்பாடுகளையும்” செய்வது,

பிறகு ஒரு வேளை சோற்றுக்காக சிங்களனிடம் ஈழத்தமிழர்களை கையேந்த வைத்து விட்டு, குப்பை அள்ளுவதற்கும்; சாலைகள் போட்டு தரகுக்சகூலி வாங்குவதற்கும் அதிகாரம் கொண்ட ஒரு அரசு அமைத்து, தமிழீழ மண்ணில் மலிவு விலை மதுக்கடை, குடும்ப குழுமத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு, குடும்ப குழுமம் தயாரிக்கும் திரைப்படங்கள் வெளியிடுவது, போன்ற விடுதலையை தமிழீழ மக்களுக்கு பெற்றுத் தருவது,

இவையை தி.மு.க. தலைமையின் செயல்திட்டம்...

வாழ்க! “தமிழினத் தலைவர்“ மு.க.

2 comments:

Anonymous said...

இன்னும் அந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தனக்கு ஒன்னுக்கு போவதுகுட தெரியாமல் , சக்கர நாற்காலியில் காலத்தை ஓட்டிக்கொண்டு, பெரிய மகனை அடக்க தெரியாமல்.....

said...

கருணாநிதியின் முதுமையைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை... அவர் குணமடைய வேண்டுகிறோம்...

அவரின் தமிழின துரோகத்தைத்தான் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...