Tuesday, July 22, 2008

வீரமணி அடிகளாரின் அருள்வாக்கு-காட்டுமோட்டான்

ஒவ்வொரு அமாவாசைக்கும் செத்துப்போன பெத்த அப்பனுக்கு சோறு போடுவதாக நினைத்து காக்காவுக்கு! படையல் போடுற மாதிரி...

மாசத்து ஒரு முறை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அறிக்கை மூலம் அருள்வாக்கு சொல்வது இந்த வீரமணிக்கு ஒரு பொழப்பாப் போச்சி...

ஒழுங்காக கல்வித் தொழிலைப் பார்த்தோமா, அண்ணாமலையாருக்கு கிரிவலம் வர மாதிரி கோபாலபுரத்தை சுத்திச் சுத்தி வந்தமோ... வழியில ஏதாவது அன்னதானம், பட்டை, மொத்தைன்னு ஏதாவது கெடச்சது திண்ணு வயித்த ரொப்பிக்கினு கட்டைய நீட்டினோமான்னு இல்லாம... இவருக்கு எதுக்கு இந்த வீண் வேலை... இவரு எதுக்கு தயாநிதி மாறனை பாராட்டி அறிக்கையெல்லாம் விடுராரு...

“ஏஞ்சாமி... உங்களுக்கு எதுக்கு இந்த வேலையத்த வேலை... மதுரக்காரரு கோவிச்சிக்கனாருன்ன ஒங்கலால தாங்கமுடியுங்களா...

எக்குதப்பா உங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னாகூட உங்க நண்பர் கருணாநிதியால கூட உங்களை காப்பாத்த முடியாது... ஏன்னா அவருக்கு இப்பல்லாம் என்ன செய்யரோம்... என்ன பேசரோம்... புரியாம ஏடாகுடாமா ஏதாவது பேசிக்குன்னு இருக்காரு... அவரே சூழ்நிலை கைதியா இருக்காருன்னு எல்லோரும் சொல்றாங்க...

நான் சுயமரியாதைகாரன் அப்படின்னு மார்த்தட்டிக்குற அவராலேயே இப்ப சுயமா சிந்திக்க முடியல... பேச முடியல... எழுதமுடியல... செயல்பட முடியல...

அறிஞர் அண்ணா காலத்திலிருந்து அவரு கூட இருந்து தி.மு.க-வுக்காக பாடுபட்ட த.கிருட்டிணனை கொன்னவனுங்க மசுறகூட அவரால புடுங்க முடியல...

அவர நம்பி எந்தத் துணிச்சல்ல தயாநிதி மாறனை பாராட்டுரிங்க...

ஆமா அது என்னங்க “நடந்தது நடந்ததாக இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்”...

மதுரையில தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூனு பேரு செத்து அவங்க பொண்டாட்டிங்க தாலி அறுத்தாங்க இல்ல... அத அப்படியே விட்டுடச் சொல்றிங்கலா?

இல்ல... “உன் வீட்டுக்காரனை நான் கொன்னது கொன்னதா இருக்கட்டும் நாம ரெண்டுபேரும் சேர்ந்து புள்ளகுட்டி பெத்து நல்லபடியா வாழலாம் வான்னு” கூப்புடரிங்களா?...

உங்களுக்கெல்லாம் ஏயா கருப்பு சட்ட, பேசாம அதை கழட்டிட்டு சிலுக்கு ஜிப்பா மாட்டிகொண்டு ஒரு வெத்தலை டப்பாவும், ஒரு குடையும், ஒரு பையும் எடுத்துக்கொண்டு... வேற ஏதாவது தொழில் செய்யலாமுல்ல...

காட்டுமோட்டான்

0 comments: