Tuesday, July 1, 2008

தே.மு.தி.க.-வில் பண்ருட்டி இராமச்சந்திரன் ஓரங்கட்டப்பட்டாரா?-காட்டுமோட்டான்

நம்ம புரட்சி கலைஞரு விசயகாந்து நாயுடு தேசிய! முற்போக்கு!! திராவிடர்!!! கழகம்!!!!!!!!! அப்படின்னு கட்சி தொடங்கினாரு... இல்ல...

குறுக்கால... புரட்சின்னா என்னன்னு யாரும் வயைத்திறந்து கேக்கக்கூடாது. புரட்சித் தலைவர்... புரட்சித் தலைவி... மாதிரி புரட்சி கலைஞர்... அப்புறம் கேப்டன் என்றால் என்னன்னும் யாரும் பட்டிமன்றம் நடத்தக்கூடாது...

தே.மு.தி.க-வை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யமுடியாதுன்னு தேர்தல் ஆணையம் சொல்லிவிட்ட நிலையில்...

“கட்சியை இவன் என்னடா பதிவு செய்றது... என் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே மனசுல பதிஞ்சிட்டாங்கடா...”-ன்னு விசயகாந்து பேசுனது உங்கக் காதுல விழுந்திருக்கும்னு நினைக்கிறேன்...

அந்நேரம் பார்த்து பி.இ. ஆனர்சு படிச்ச அரசியலுல பழம் திண்ணு கொட்டப் போட்ட முன்னாள் அமைச்சரு நம்ம பண்ருட்டியார் தே.மு.தி.க.-வில் சேர்ந்தார்...

விசயகாந்து நாயுடு பண்ருட்டியாரிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் வேலை “டெல்லிக்குப் போயி கட்சியை பதிவு செஞ்சிட்டு வாங்க...“
பண்ருட்டியாரும் தில்லியில முகாமடிச்சி சுளுவா வேலைய கச்சிதமா முடிச்சார்...

தே.மு.தி.க. கட்சிகாரங்களுக்கு ஒரே கொண்டாட்டந்தான்... தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம்போட்டு பண்ருட்டியார பேச அழைச்சாங்க... அவரும் அங்க இங்க போயி புரட்சிக்கலைஞரின் புகழ்பாடி அரசியல் பேச ஆரம்பிச்சாரு... எதிர் கட்சிக்காரங்கல அப்படி இப்படி மடக்குனாரு... அவருக்கு கட்சிக்காரங்க எல்லாரும் முக்கியத்துவம் கொடுத்தாங்க... நம்ம இராசாவுக்கு அறிவுற சொல்ல நல்ல ஆளு கிடைச்சிட்டார்ன்னு தே.மு.தி.க.காரங்க... நம்புனாங்க...

நம்ம புரட்சி கலைஞருக்கு கோவம் கோவமா வந்திருச்சி...
“ஏய்.............................. கம்பெனி ஆரம்பிக்கறது நானு... பேரு வாங்குறது நீயா?”
அப்படின்னு பண்ருட்டியார பார்த்து கண்ணு செவக்க விசயகாந்து நாயுடு கேட்டாரு...

பண்ருட்டியாருக்கு ஒன்னும் புரியல... “என்னடா இது வம்பாப்போச்சு இவரு கம்பெனி ஆரம்பிச்சாரா!!!!!!!!!!!!!!!! கட்சி ஆரம்பிச்சாருன்னுதான நாம சேந்தோம்... இவரு இன்ன இப்படி பேசுறாரேன்னு” சோந்து போயிட்டாறு.

விசயகாந்து நாயுடு கட்சிக்காரங்கல கூப்பிட்டு “இனிமே கட்டவுட் வைக்கும் போது என் படமும் என் பொண்டாடி படமும் மட்டும்தான் பெருசா போடனும்... வேற எவன் படமும் பெருசாப் போடக்கூடாது குறிப்பா பண்ருட்டியாரு படத்த பெருசா போடக்கூடாது”ன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு...

நாட்டுல வெலவாசி ஏறனத கண்டிச்சி நேத்து விழுப்புரம் மட்டுமில்லாம தமிழ்நாட்டுல ஆர்ப்பாட்டம் நடந்தது இல்ல அதுலயும் பண்ருட்டியார எங்கேயும் காணோம்...

பண்ருட்டியாரோட சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திலும் அவர காணோம்... நாதியத்துபோயி கெட்டந்த சி.ஆர்.பாசுகருன்னு ஒருத்தன்... அவன் யாருன்னு தெரியுதா? மக்கள் தொலைக்காட்சியில நீதிக்கு குரல் கொடுத்தாரே அவரேதான்... அந்த ஆளு சரியில்ல... அங்கங்க கைய நீட்டுறாருன்னு மக்கள் தொலைக்காட்சியில் இருந்து விரட்டி அடிச்சாங்க...

அங்க ஓட்டம் எடுத்தவன் நேரா நம்ம புரட்சி கலைஞர் விசயகாந்து நாயுடுகிட்ட ஒட்டிக்கிட்டு மூச்சு வாங்குனாரு... அவருதான் கடலூர் ஆர்ப்பாட்டத்துல கலந்துகிட்டு எழுச்சி உரையாற்றுனாரு...

அப்படி இப்படி கூட்டிச் கழிச்சிப் பார்த்தா பண்ருட்டியாரு இப்ப எங்க இருக்காருன்னு தெரியல...

மொத்தத்துல “பைத் பைத் நுத்திப்பத்து படாச்சிக்காக பத்து....”

காட்டுமோட்டான்

0 comments: