Sunday, June 22, 2008

இந்திய அரசு இலங்கைக்கு போர்படை உதவிகள் அளிப்பதைத் தடுக்க, தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

இந்திய அரசு இலங்கைக்கு போர்படை உதவிகள் அளிப்பதைத் தடுக்க, தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத்துறை செயலாளர் விசய் சிங் ஆகியோர் திடீரென கொழும்பு சென்றுள்ளனர்.

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில் இவர்கள் அங்கு சென்றுள்ளது போர்படை உதவிகள் அளிப்பது தொடர்பாகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஏற்கெனவே நார்வே அரசு சமரசத் தூதரை சிங்கள அரசு தன்னிச்சையாக திருப்பி அனுப்பியதைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றை நிறுத்தியுள்ளன.

இலங்கையில் மனித உரிமை மீறல் நடைபெறும் நிலையில் இந்தியா அந் நாட்டுக்கு பெருமளவு நிதி உதவி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கவும் முன் வந்திருப்பது மேற்கண்ட அதிகாரிகளின் கொழும்பு பயணம் மூலம் உறுதியாகிறது. என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: