Saturday, August 2, 2008

சுய லாபத்துக்காகத் தமிழகப் பிரச்னையில் விட்டுக் கொடுத்து விட்டாரா-நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்

ஒகேனக்கல் பிரச்னையில் பேசிய பேச்சுக்காகப் பாடம் கற்றுக்கொண்டேன் என்று இரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அவர் என்ன அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கு பேசிய பேச்சுக்காக அவர் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது தவறு என்று கூற வருகிறாரா? அல்லது குடி தண்ணீருக்காக தவித்துக் கொண்டு இருக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களுக்காகப் பேசியது தவறு என்று கூறுகிறாரா?

எனவே அவர் வருத்தம் தெரிவித்தது பற்றி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். எனக்கு இரஜினியுடன் தனிப்பட்ட பிரச்னை எதுவும் கிடையாது. இருந்தாலும் இரஜினியின் விளக்கம் காரணமாக திரைப்படத் துறையினர் மத்தியிலும் எழுந்துள்ள கருத்துகளைத் தொடர்ந்தே ரஜினியிடம் விளக்கம் கேட்க விரும்புகிறேன்.

சுய லாபத்துக்காகத் தமிழகப் பிரச்னையில் விட்டுக் கொடுத்து விட்டாரா என்றே கேட்க விரும்புகிறேன்.

நன்றி: தினமணி

0 comments: