Friday, August 22, 2008

தமிழக அரசே! தந்தை பெரியாரின் நூல்களை அரசுடமையாக்கு!

வாழ்நாளெல்லாம் தமிழினத்தின் ஏற்றத்திற்காக உழைத்த தலைவர் தந்தை பெரியார். அவரின் எழுத்தும் பேச்சும் கருத்தும் செயல்பாடுகள் அனைத்தும் அவரின் சுயசிந்தனை. தன்னுடைய வாரிசாக தன்னுடைய கொள்கைகளை தமிழ்நாட்டிற்கு விட்டுச் சென்றவர் தந்தை பெரியார்.

இப்படிப்பட்ட மாபெரும் தலைவனின் கருத்துகளை “அறிவுசார் சொத்துரிமை“ என்ற பெயரில் தன் குடும்பச் சொத்தாக மாற்ற துடிக்கிறார் பெரியாரின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் கந்து வட்டிக்காரர் வீரமணி அவர்கள்.

இதை தடுத்து நிறுத்துவது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். யார் யாருடைய நூல்களை எல்லாம் அரசுடமையாக்கும் தமிழக அரசு தமிழினத்திற்காக உண்மையாக உழைத்த தந்தை பெரியாரின் நூல்களை இதுவரை அரசுடமையாக்காதது வெட்கக்கேடு.

பெரியாரின் கைபிடித்து நடந்தோம் கால்பிடித்து நடந்தோம் என கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா?

0 comments: