Wednesday, September 17, 2008

“மிரட்டுகிற வேலை வேண்டாம்” - பழ. நெடுமாறன்-6

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

... ... ... ... ...

என்ன பெரிய வலிமையான அரசாங்கம் இந்த அரசாங்கம்? பதினான்காம் லூயி, ஜார் மன்னர்கள் என்ன ஆனார்கள்? மிரட்டுகிற வேலை வேண்டாம். ஏனென்றால் மிரட்டுவதற்குக் கூட துணிவு கிடையாது. எங்களுக்குத் தெரியும்.

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டான் என்றால் தமிழக மக்கள் இரங்கல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்புவதற்கு கவிதை எழுதுகிறார்கள்.
பிரச்சினையைத் திசைதிருப்புவதை ரொம்ப நாளைக்குச் செய்ய முடியாது. திசை திருப்புவதால் தடம் புரண்டு விடுவார்கள். அவர்களுக்கு நெஞ்சில் உரம் இல்லை.

மக்களை ஒன்று திரட்டவும் மகத்தான மாற்றம் கொண்டு வரவும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் உலகத் தமிழர்களால் முடியும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.

முற்றும்

0 comments: