Monday, September 29, 2008

தமிழ்நாட்டில் நடுநிலை நாளேடு என்று எதுவுமில்லை

இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் அனைத்து நாளேடுகளும் தன்னை நடுநிலை நாளேடு என்று அறிவிக்கின்றன. உண்மையில் அப்படித்தான் அந்த நாளேடுகள் செயல்படுகிறதா என்றால்; ஓராயிரம் கேள்விக்குறிகள்தான் மிஞ்சும்.


அந்த வகையில் நாளேடுகள் பற்றி ஒரு கணிப்பு:

தினத் தந்தி் - தமிழ், தமிழர் நலனுக்காக சி.பா.ஆதித்தனார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நாளேடு. இன்று எந்தவொரு கொள்கையும் இன்றி எழுத்துப்பிழையோ, சொற்பிழையோ, கருத்துப்பிழையோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சி செய்தியை அதிகமாக வெளியிட்டு யாரையுமே எப்போதுமே எதிர்க்காமல் தன்னுடைய கல்லாவை கட்டும் சிறந்த நாடார் கடையாக தற்போது மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தமிழ் அல்லாத பல சொற்களை தமிழாக்கிய பெருமை இந்நாளேட்டுக்கு உண்டு.


தின மலர் - நாட்டில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படும் நாளேடு. பகுத்தறிவாளர்களையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் எப்போதுமே எல்லாநிலைகளிலும் எதிர்ப்பது, தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக்கொள்ள அனைத்து மதப்பண்டிகைகளுக்கும் சிறப்பு மலர் வெளியிடுவது, தமிழ்-தமிழர் நலன் பற்றி உண்மையாக சிந்தித்து செயல்படுபவர்களை நையாண்டி செய்வது அல்லது அவர்களுக்கு தேச துரோகிகள் பட்டம் கொடுப்பது, தமிழீழ போராளிகளை எப்போதுமே ஒரு பேட்டை ரௌடிபோல் சித்தரிப்பது போன்றவை இந்த நாளேட்டின் அன்றாடப்பணிகள்.


தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தீபாவளி அன்று நல்லெண்ணை, சீயக்காய் பொட்டலம் வழங்கும் ஒரே நாளேடு. மாடுகூட மேயாத தர்ப்பைப்பில்லை நம் கையில் திணித்து காசு பார்த்த பார்ப்பனக்கூட்டம் “தினமலர்” என்ற பெயரிலே தமிழன் காசிலேயே தமிழனுக்கு நஞ்சு வைக்கிறது.


தினகரன் - கே.பி.கே. குடும்பத்தினரால் நடத்தப்பட்ட தமிழனுக்கு துரோகம் செய்யாத நாளேடு. இன்று மாறன் குடும்பத்திற்கு கைமாறியதும் தன் குலத்தொழிலான தமிழின துரோகத்தை மிகச்சிறப்பாக செய்கிறது. தங்கள் சிக்கலே தமிழர்களின் சிக்கலாக தங்கள் வாழ்வே தமிழர்கள் வாழ்வாக தமுக்கடித்து நடிகர்-நடிகைகளை வைத்து காசு பார்த்து அவர்களை மட்டும் வாழவைக்கும் நாளேடு. நாள் தவறாமல் நடிகைகளின் சதைப்பிண்டங்களை தமிழர்களுக்கு இலவசமாக காட்டும் பணியை மிகச்சிறப்பாக செய்கிறது.


தொடரும்...

2 comments:

said...

விரிவாக எழுதுங்கள், எழுதி பதிவு செய்யவேண்டிய தகவல் இது.
பதிவுக்கு நன்றி

said...

தமிழனை சீரழிக்கும் அனைத்துக் காரணிகளையும் அலசி ஆராயப்பட வேண்டும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தமிழன் காசில் தமிழன் தலையில் கொள்ளி வைக்கும் நாளேடுகளே அதிகம் என்ற முடிவுக்கும் நாம் வரலாம்.

தமிழர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அந்த நாளேடுகள் தானாக திருந்தவேண்டும். அல்லது திருத்தப்பட வேண்டும்.